ஊராட்சி தலைவியின் கணவரை ஓட ஓட வெட்டிய கும்பல் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை இருவர் வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், களியனூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வடிவுக்கரசி.

இவரது கணவர் ஆறுமுகத்தை கடந்த 22 ஆம் தேதி, இரண்டு மர்மநபர்கள் வெட்டி கொல்ல முயன்றனர்.

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்