கோரத்தாண்டவம் ஆடிய சூறாவளி..அடியோடு சாய்ந்த வாழைகள்..அதிர்ச்சியில் விவசாயிகள் ...

x

கடலூர் கேப்பர் மலை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சூறாவளிக்காற்று காரணமாக வாழை மரங்கள் கடும் சேதம் அடைந்தன. ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்து நிமிடங்கள் மட்டுமே வீசிய இந்த சூறாவளி காற்றால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்