கூகுள் பே-ல் பணம் வாங்க மாட்டேன் என சொன்னதால் அடி, உதை.. வாடிக்கையாளர் அட்டூழியம்

x
  • கூகுள் பே இல்லாததால் டாஸ்மாக் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியில் அரசு மதுபான விடுதி ஒன்று இயங்கி வருகிறது.
  • இங்கு மதுபானம் வாங்க வந்த இன்னாசி என்பவர் கையில் பணம் இல்லை என்றும், கூகுள் பே மூலம் அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
  • அதற்கு டாஸ்மாக் ஊழியர் மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
  • இதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்