2 மாதமாக இருளில் மூழ்கிய மலை கிராமம்...கைவிரித்த மின் ஊழியர்கள்..மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அவலம்

x

நாமக்கல் மாவட்டம் போதமலையில் உள்ள கீழுர் கிராமத்தில், மின்மாற்றி பழுதானதால் கடந்த 2 மாதமாக மின்சாரம் இன்றி மலைவாழ் மக்கள் தவித்து வந்துள்ளனர். பழுதடைந்த மின்மாற்றியை மலைப்பகுதிக்கு கீழே மக்கள் கொண்டு சென்ற நிலையில், புதிய மின்மாற்றியை கடந்த ஜீன் 20ஆம் தேதி மலைக்கு கீழ் பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் வைத்துச் சென்றுள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த 10 நாட்களாக 15க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், மின்மாற்றியை மலைக்கு மேலே சுமந்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்