அதிவேக பைக் ஓட்டிகளே உஷார்.. "கொலைக்கு நிகரான வழக்கு.. 1 லட்சம் அபராதம்" - போலீசார் எச்சரிக்கை

x

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கி உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலைக்கு நிகரான குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கமிஷனர் எச்சரித்துள்ளார். நெல்லையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிறுவன் உட்பட 6 பேரை பிடித்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை நேரில் ஆய்வு செய்த நெல்லை கமிஷனர் ராஜேந்திரன், மோட்டார் சைக்கிளில் வேகத்தை அதிகரிக்கும் கருவிகளை பொருத்தும் கடைகளுக்கு, 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்