கோயம்பேடு காய்கறி சந்தையில் கிடுகிடுவென உயர்ந்த விலை.. - இன்று மட்டும் தக்காளி விலை இவ்வளவா?

x

நாட்டு தக்காளி 15 ரூபாய் விலை உயர்ந்து இன்று மொத்த விற்பனையில் 95 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 130 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

நவீன் தக்காளியும் 10 ரூபாய் விலை அதிகரித்து 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நேற்று 35 வண்டிகள் வந்த நிலையில் இன்று 30 வண்டிகள் மட்டுமே வந்துள்ளதால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்று வரத்து குறைவால் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்ணை பசுமை கடை மற்றும் நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு சார்பில் தக்காளி 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளை, முள்ளங்கி, வரி கத்திரி, காலிஃப்ளவர், எலுமிச்சை, மாங்காய் 35 ரூபாய்க்கும், தேங்காய் 26 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஊட்டி கேரட் 60 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட் 20 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட், வெண்டை, உஜாலா கத்திரி 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கர்நாடக பீட்ரூட் 25 ரூபாய்க்கும், பாகற்காய் 55 ரூபாய்க்கும், முருங்கை, அவரை 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 100 ரூபாய்க்கும், பட்டாணி 190 ரூபாய்க்கும், இஞ்சி 260 ரூபாய்க்கும், பூண்டு 180 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்