சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முஸ்லிம் இளைஞருக்கு ஷாக் தந்த ஹைகோர்ட்

x

கேரள மாநிலம் திருவல்லாவைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக கைது செய்யப்பட்டார்.

ஆனால், அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கு முஸ்லிம் தனிநபர் சட்டப்படி எந்த சட்ட தடையும் இல்லை எனவும் கூறி அவர் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரப்பட்டது.

இந்நிலையில், அவரது தரப்பு வாதத்தை நிராகரித்த கேரள உயர்நீதிமன்றம், போக்சோ சட்டம் பொருந்தும் என தெளிவுபடுத்தி உள்ளது.

போக்சோ வழக்கில் முஸ்லிம் தனிநபர் சட்டம் பொருந்தாது எனவும் கூறி கேரள உயர்நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்