பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு அதிர்ச்சி தீர்ப்பு கொடுத்த சென்னை ஐகோர்ட்!

x

கடந்த 2012 - ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக சிங்கப்பூரை சேர்ந்த Advantage strategic நிறுவனம் குறித்து சுப்பிரமணிய சுவாமி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்ப​ட்டது. இது குறித்த மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது. சிங்கப்பூர் நிறுவனத்தின் தரப்பில், சிங்கப்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சிங்கப்பூர் நிறுவனத்தின் வாதத்தை ஏற்று, தனி நீதிபதி தடை விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்