கொச்சி கடல் பகுதியில் சிக்கிய ஹெராயின் - ஈரான் நாட்டை சேர்ந்த 6 பேர் அதிரடி கைது

x

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி இந்திய கடற்படையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கொச்சி கடல்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஈரானிய மீன்பிடி படகை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதிலிருந்து 200 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

படகில் இருந்த 6 ஈரானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெராயின் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் வழியாக கொண்டுவந்து கடல் பகுதியில் ஈரான் படகில் ஏற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடத்தல் கும்பல் ஹெராயினை இலங்கை படகுக்கு மாற்ற காத்திருந்த போது சிக்கியிருப்பதாகவும், இலங்கை படகை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சி வெற்றியடையவில்லை எனவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஈரானியர்கள் கொச்சி அழைத்துவரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்