குதிரையின் மீது சவாரி செய்யும் வீரன்.. பூமியிலிருந்து வெளிவந்த பொக்கிஷம்-மெய் சிலிர்த்த மதுரை மக்கள்

x

முதலைக்குளம் கிராமத்தில், நடுகல் ஒன்று பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுவதாக, தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர், முதலைக்குளம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மூன்று அடி அகலம், ஐந்து அடி உயரத்தில், வீரன் ஒருவன் குதிரையின் மீது சவாரி செய்வது போன்ற 400 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது. நேர்த்தியான வடிவில் காணப்படும் இந்த சிற்பத்தில், வீரனும், குதிரையும் அதிகளவில் அணிகலன்கள் அணிந்திருப்பதாகவும், இந்த பகுதியில் வாழ்ந்து மறைந்த வீரனுக்கு எழுப்பிய நடுகல்லாக இருக்கலாம் எனவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்