கண்முன்னே கணவன் வெட்டி கொலை - துடிதுடித்த காது கேளாத, வாய் பேசாத மனைவி

x

மணப்பாறை அருகே மனைவியின் கண்ணெதிரே கணவனை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சோக சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஐஸ் வியாபாரி குப்புசாமி, மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தந்தையை காப்பாற்ற முயன்ற அவரது மகன் மாரிமுத்துவையும், 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். காதும் கேளாத, வாயும் பேச முடியாத அவரது மனைவி, தன் கண்ணெதிரே தனது கணவனும், மகனும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு செய்வதறியாது துடித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குப்புசாமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் மகனான மாரிமுத்துவின் காதல் விவகாரம் தான், இந்த கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்