கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை..“நிரம்பி நிற்கும் பெருந்தேனருவி அணை“ - கரையோர மக்களுக்கு ஹை அலர்ட்

x

கேரளாவில் உள்ள பெருந்தேனருவி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழை நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதன்படி, பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெருந்தேனருவி அணையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிகளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்தேனஅருவி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்