சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... வேரோடு சாய்ந்து விழுந்த மரம்

x

சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் நுழைவாயில் முன்பாக இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அப்பகுதியை ஆய்வு செய்து, மரத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்