அட நம்ம சென்னையா இது... அதிகாலை முதலே கொட்டித் தீர்க்கும் மழை

x

சென்னை மாநகரில் அதிகாலை முதலே மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனிடையே, திருவல்லிக்கேணி, எழும்பூர், மெரினா, பட்டினம்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், கோட்டூர்புரம், ஆழ்வார்ப்பேட்டை புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், மாநகர் முழுவதும் குளிமையான சூழல் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்