தமிழகத்தில் ஒரு மணி நேரத்தில் அடித்து விளாசிய மழை

x

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரத்தில் சுமார் ஒரு மணி நேரத்தில் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்..திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல், வேலூரில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் சுற்று வட்டாரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்