சமுத்திரக்கனி பாணியில் தலைமை ஆசிரியர்..பேண்டு வாத்தியதுடன் Ultimate கொண்டாடட்டம்

x

வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 26 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த கூடுதல் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பணி ஓய்வு பெற்றார். மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ராஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடத்த முன்னாள் மாணவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி வாட்ஸ் அப் குழு வாயிலாக அனைவரும் ஒன்றிணைந்து நிதி பங்களிப்போடு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினர். பேண்டு வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்ட ஆசிரியர் ராஜேந்திரனுக்கு, மாணவர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆசிரியரை சிறப்பிக்கும் விதமாக முன்னாள் மாணவர்கள் அவருக்கு தங்க மோதிரம் மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் வாத்தியங்கள் முழங்க ஆசிரியரை ஊர்வலமாக காரில் ஏற்றி சென்ற முன்னாள் மாணவர்கள், நடனமாடியவாறு அவரை வீடு வரை வழி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்