"ஹெட் மாஸ்டர் அடிச்சதுல என் காலே போச்சு.. இனி ஸ்கூலுக்கே போக முடியாது" - படுத்த படுக்கையான பள்ளி மாணவன்

x

மதுரையில் தலைமை ஆசிரியர் அடித்ததால் காலில் அறுவை சிகிச்சைக்கு ஆளான 9ம் வகுப்பு மாணவன் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.

தாடையம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த நாகராஜ் என்ற 9ம் வகுப்பு மாணவனை, கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை ஆசிரியர் பிரபு அடித்ததில் காலில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாணவனின் கால் பகுதிக்குள் சீழ் வைத்ததால், ராஜாஜி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட.

அதன் பிறகு, நடக்க முடியாமல் இருக்கும் மாணவன் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த அவர்கள், தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்