"நீதிமன்ற உத்தரவை மீறி அவதூறு பரப்பி வருகிறார்" - அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு புகார்

x

நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக, தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி, புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவதூறு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த கூடுதல் மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதால், நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்