"எக்ஸாம்ல அவன் பேப்பர் பிடுங்கிட்டான்..HM வந்து என்னை குனிய வச்சி அடிச்சாங்க" ஆபிரேஷன் செய்யும் அளவுக்கு தள்ளப்பட்ட மாணவன்

x

திருநெல்வேலியில், 10ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய சக மாணவன், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த பிரசாத் - மாரியம்மாள் தம்பதியின் மகன் பாரத், பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜனவரி மாதம் நடந்த திருப்புதல் தேர்வின் போது, காப்பி அடிக்க விடைத்தாளை தராததால் ஆத்திரமடைந்த சக மாணவர் ஒருவர், பாரத்தை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், காப்பியடிக்க விடைத்தாள் கொடுத்ததாக கூறி ஆசிரியரும் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதனால், மாணவன் பாரத்துக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவானது. இதனிடையே, பாரத்தை தாக்கிய சக மாணவன், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்