"ரஹானேவுக்கு பதில் இவர் இருக்கலாம்"...பகீர் கிளப்பிய பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி

x

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக மீண்டும் ரஹானே நியமிக்கப்பட்டதை புரிந்துகொள்ள முடியவில்லை என, சவுரவ் கங்குலி கூறியுள்ளார். மோசமான பார்ம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு திரும்பினார். தொடர்ந்து தற்போது அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பிசிசிஐயின் முன்னாள் தலைவர் கங்குலி, ரஹானேவை மீண்டும் துணை கேப்டனாக நியமித்ததன் பின்னால் உள்ள எண்ண ஓட்டத்தினை, தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை பிடித்துள்ள ஜடேஜாவே, துணை கேப்டன் பதவிக்கு சரியான நபர் எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்