"நல்லவனா நடிச்சான்.. நானும் நம்பிட்டேனே.. வீட்டுக்கு போகும் போது தான் தெரிஞ்சது" - கதறிய தாய்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், திருமணமான ஆறே மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மர்மம் உள்ளதாக கூறி கணவன் வீட்டாரை தாக்க முயற்சி நடந்துள்ளது.

மானாமதுரை பர்மா காலனியில் வசித்து வந்த ஜெகதீஷ் என்பவருக்கும் ஜெபசீலி என்பவருக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், ஜெகதீஷ் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது.

ஜெகதீஷின் அம்மா மற்றும் அவரது தங்கை இருவரும் ஜெயசீலிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே, ஜெபசீலி, தமது கணவனுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது அவர் செல்போனை கட் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெபசீலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு, மானாமதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே உடலில் காயம் உள்ளதாகவும், சாவில் மர்மம் என கூறி ஜெகதீஷ் மற்றும் அவருடைய அம்மா, தங்கையை ஜெபசீலி வீட்டார் தாக்க முயற்சித்தனர். அப்போது தடுக்க சென்ற காவல் ஆய்வாளர் அருள் ராஜுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்