சென்னையில் போலீசாரின் ரோந்து பணி - கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்

சென்னையில் போலீசாரின் ரோந்து பணி - கட்டுக்கட்டாக சிக்கிய  ஹவாலா பணம்
x

சென்னையில் போலீசாரின் ரோந்து பணி - கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்


அப்போது அந்த சாலையில் ஒரு பிரபல ஹோட்டல் எதிரே இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.


அவர்கள் அருகே போலீசார் சென்ற போது அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் அவர் கொண்டு வந்த பேக்கை சோதனை செய்தனர்.


போலீசார் முதலில் சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா தான் வைத்துள்ளனரா என்ற சந்தேகத்தில் சோதனை செய்தனர்.


ஆனால் அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததை அடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.


விசாரணையில் அந்த சென்னை ஏழுகிணறைச் சேர்ந்த சகாபுதின் (57) என்றும் அவர் வைத்திருந்த கணக்கில் இல்லாத 70 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது.


இதனை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஹவாலா பணத்தை ஒப்படைத்தனர். சகாபுதினிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இருவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்