உங்கள் போன் தொலைந்து விட்டதா..! - கண்டுபிடிக்க புதிய திட்டம்

x

தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்வதற்காக 'சஞ்சார் சாத்தி' என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியவும், போலி செல்ஃபோன்களை அடையாளம் காணவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், சோதனை முயற்சியாக சஞ்சார் சாத்தி இணையதளத்தை பயன்படுத்தியதன் மூலம் 40 லட்சம் போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு, அதிலிருந்து, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்