நேருக்கு நேர் மோதி நொறுங்கிய லாரிகள் - ஸ்தம்பித்த போக்குவரத்து -15 கி.மீ.-க்கு அணிவகுத்த வாகனங்கள்

x

தருமபுரி மாவட்டம் அரூரில், இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரூர் - சேலம் சாலையில், கிழங்கு லோடு ஏற்றி வந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ஓட்டுநர்கள் இருவர், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், ஓட்டுநர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்