மாடலிங் பெண்ணின் ஆபாச படம் பணம் கேட்டு மிரட்டிய குறும்பட இயக்குநர் - அதிரடி காட்டிய போலீசார்

x

மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி, பெண்ணின் ஆபாச படத்தை பெற்று, 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய குறும்பட இயக்குனரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மாடலிங் துறையில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, வாட்ஸ் அப் எண்ணில் வந்த விளம்பரத்தை வைத்து தொடர்பு கொண்டுள்ளார். அதில், இங்கிலாந்து நாட்டிற்கு மாடலிங் தேவைப்படுவதாகவும், விருப்பமுள்ளவர்கள் புகைப்படம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய அந்தப் பெண் வாட்ஸ் அப் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த நபர் கேட்டபடி, தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அந்தப் பெண் அனுப்பியுள்ளார். இந்த புகைப்படங்களை வைத்து, சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாகக் கூறி, பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் கேட்டு அந்த நபர் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், செல்போன் எண்ணை வைத்து, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்