அரியானா முதலமைச்சர் வீடு அருகே அரசு ஊழியர்கள் போராட்டம் - தண்ணீர் பீய்ச்சி அடிப்பு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

x
  • அரியானாவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் மீது போலீசார் விரட்டியடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பஞ்சகுலாவில் உள்ள முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வீடு நோக்கி, அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
  • அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். போராட்டக்கார‌ர்கள் கலைந்து செல்லாத‌தால், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
  • இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் தடுப்புகளை தூக்கிவீசி உள்ளே நுழைய முயன்றனர்.
  • இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், லேசான தடியடியும் நடத்தி விரட்டினர்.
  • இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்