தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு

x

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணைக்கான நீர் வரத்து 7 ஆயிரத்து 914 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 487 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர் வரத்து 7 ஆயிரத்து 886 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக, 4 ஆயிரத்து 987 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்