"அரையாண்டு லீவு ஓவர்..." - தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

x

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள், கடந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளை சேர்த்து, அரையாண்டு தேர்வு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.

இதனிடையே, விடுமுறை முடிவடைந்த நிலையில், ஆறு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் நடைபெறுகின்றன

. அதேபோல, ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், முகக்கவசம் குறித்தான அறிவிப்பை சுகாதாரத்துறை வெளியிடாத நிலையில், மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வருவார்கள் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Next Story

மேலும் செய்திகள்