"அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்து முடிவு செய்யவில்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ்

x

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.

அவர் கோவிலுக்குள் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் எல்லா ஆண்டும் நடப்பதுபோல் இந்த ஆண்டும் அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்றார்.

தேர்வுக்கு விடுமுறை விடுவது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தொடக்கப்பள்ளிகள் மூடப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்