கடைக்குள் சரசர வென உள்ளே... புகுந்து ரீ சார்ஜ் போட்ட நபர் - தடுத்த ஓனருக்கு நேர்ந்த கதி

x

பல்லடத்தில், அத்துமீறி கடைக்குள் புகுந்து மொபைல் போன் ரீசார்ஜ் போட்ட நபரை தட்டிக்கேட்ட கடை உரிமையாளரை தாக்கும், சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் மொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு குடிபோதையில் வந்த நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து மொபைல் போனை சார்ஜ் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, தன்னிடம் அனுமதி பெறாமல் சார்ஜ் செய்தவரை, வினோத் குமார் கேட்டுள்ளார்.இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்