சூதாட்ட போதையில் பிரிந்த உயிர்.. வீட்டுக்கு தெரியாமல் தலைக்கு மேல் வட்டி - ஏரி கரை மரத்தில்... கதறிய குடும்பம்!

x

வில்லியனூர் அடுத்த கீழூர் சிவராந்தகம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவரிடம், குடும்பத்திற்கே தெரியாமல், ஜெயச்சந்திரன் வட்டிக்கு அடிக்கடி கடன் வாங்கி உள்ளார். இந்த விவகாரம் ஜெயச்சந்திரனின் மனைவி கலைவாணிக்கு தெரியவர, அவர் கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஜெயச்சந்திரன், விரக்தியில், கீழூர் அருகே சிவரந்தகம் ஏரி கரையில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், ஜெயச்சந்தின் அடிக்கடி கடன் வாங்கி, 3-ம் நம்பர் லாட்டரி போன்ற சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்