எச்சரித்தது போலவே நடந்த பயங்கரம் - சூடானில் இந்தியர் பலி..!

x

சூடானில், ராணுவம், துணை ராணுவம் இடையிலான மோதல் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில், இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்துள்ளனர். இதற்கிடையே, கார்டூம் பல்கலைக்கழக பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 88 பேர், அங்கு சிக்கியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதற்கிடையே, தங்களை மீட்குமாறு, உமர் பாரூக் என்ற மாணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தாங்கள் அவநம்பிக்கையான சூழலில் சிக்கியிருப்பதாகவும், உணவு குடிநீர் இன்றி தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, தங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்