குஜராத் பால விபத்து... "கைதானவர்களுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம்" - வழக்கறிஞர்கள் அமைப்பு அதிரடி

x

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் கைது செய்யப்பட்ட 9 பேர் சார்பாக ஆஜராகப் போவதில்லை என்று குஜராத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து புதுப்பிப்பதற்காக மூடப்பட்டிருந்த மோர்பியில் உள்ள பிரிட்டிஷ் கால தொங்கு பாலம் ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அதன் உயர்மட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், மோர்பி மற்றும் ராஜ்கோட் பார் அசோசியேஷன் இன்று காலை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, இவ்விவகாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்