குஜராத் தேர்தல்.... பறக்கும் படையினர் அதிரடி சோதனை... கோடி கணக்கில் சிக்கிய தங்கம், வெள்ளி

x

குஜராத் மாநிலத்தில் 89 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற உள்ளது.

இதனை ஒட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 478 கோடி ரூபாய் மதிப்புள்ள 143 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தவிர 14 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பானங்களும், 27 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்