கும்பலாக சூழ்ந்த இடத்தில் விழுந்த நெருப்பு.. மக்களுடன் தெறித்து ஓடிய போலீஸ் - குஜராத்தில் பரபரப்பு

x

குஜராத்தில் பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். வதோதராவில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பை சேர்ந்தவர்கள் கற்களை வீசி தாக்கி கொண்டதுடன், அங்கிருந்த வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினர். அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்