"யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்" - குஜராத் பால விபத்தில் 12 உறவினர்களை பறிகொடுத்த பாஜக எம்பி

x

குஜராத் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில், பாஜக எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.

தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி. மோகன்பாய் குந்தாரியாவின் தங்கை குடும்பத்தினர் 12 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. விபத்தில் தனது சகோதரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது என்றும், விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மோகன்பாய் குந்தாரியா கூறியுள்ளார். மீட்பு பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள அவர், தனது கண் முன்பே ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் எடுக்கப்பட்டதாக சோகத்துடன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்