"காலை கடன்கள் முடிக்க தெரு குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் காவலர்கள்" - காவலர்கள் கடும் அவதி

x

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், குலசேகரபட்டினம் தசரா விழாவிற்காக 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் உணவு, கழிப்பிட வசதி செய்யப்படாததால், கடும் அவதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காலை கடன்களை முடிக்க வெளியே தெருக்களில் உள்ள குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் அவதி அடைவதை கண்டு மனம் வருந்தும் அப்பகுதி கிராமவாசிகள், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு போதுமான வசதிகளை செய்துதர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்