குரூப்-4 தேர்வு முடிவுகள் விவகாரம்... TNPSC வட்டாரங்கள் கூறிய தகவல்...

x

கடந்த வெள்ளிக்கிழமை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியான, சில மணி நேரங்களிலேயே முடிவுகள் குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். எனினும், தேர்வு முடிவை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி எந்த விளக்கங்களையும் இதுவரை அளிக்கவில்லை. இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் தொடர்பாக, அடுத்த வாரம் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் இது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் கூறி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்