குரூப் 2 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்... "படிக்காமலே இருந்திருக்கலாம்னு தோணுது.." - ஆர்ப்பாட்டத்தில் தேர்வர்கள் குமுறல்

x

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி, தேர்வர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வில், வினாத்தாள் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட சில குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகளை களைய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்