எடியூரப்பா காட்டிய பச்சைக்கொடி -பாஜகவுடன் கை கோர்க்கிறாரா குமாரசாமி ?

x

கர்நாடகாவில் எதிர்வரும் காலங்களில் குமாரசாமியுடன் இணைந்து செயல்படுவோம் என, பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் ஏதேனும் வேலை ஆக வேண்டும் என்றால் 40 லட்சம் ரூபாய் கேட்பதாக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித்தலைவர் குமாரசாமி கூறியிருந்தார். மேலும், தேர்தல் நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும், ஆனால் ஒரு ஆதாரத்தையாவது வெளியிட்டுள்ளார்களா? எனவும் காங்கிரஸ் அரசுக்கு கேள்வி எழுப்பினார். இந்த கருத்தை ஆதரித்துள்ள எடியூரப்பா, குமாரசாமியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இனிவரும் காலங்களில் ஆளும் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்