200 பேரிடம் கப்ஸா விட்டு ரூ.4 கோடி பணத்தை லவட்டிய அரசு பள்ளி ஆசிரியர்

x

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 200பேரை ஏமாற்றி போலி சீட்டு நடத்தி 4 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் மீது ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர் முனியப்பன் என்பவர் பினாமி பெயரில் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்த சீட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறு குறு வியாபாரிகள் அரசு ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏலத்தில் சீட்டு எடுத்தவர்களுக்கு உரிய பணம் வழங்காமல், ஏமாற்றியது தெரிய வந்தது. முனியப்பன் தலைமறைவானதால், காவல் துறை குற்றபிரிவில் புகார் அளிக்கப்பட்டது. தங்கள் பணத்தை மாவட்ட ஆட்சியர் மீட்டு தருமாறு பணம் கட்டி ஏமாந்தவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்