ரயில் முன் பாய்ந்த அரசு பள்ளி ஹெட்மாஸ்டர்.. கோவையில் அதிர்ச்சி

x

கோவை துடியலூரில், ரயில் முன் பாய்ந்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். வெள்ளக்கிணர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த விஜயராணி என்பவர், துடியலூர் ரயல் நிலையம் அருகே, மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட ரயில்வே போலீசார், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்