அசுர வேகத்தில் வந்து ஆம்னி பேருந்து மீது மோதிய அரசு பேருந்து - தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து

x

உளுந்தூர்பேட்டை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், ஆம்னி பேருந்தும் மோதிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து அஜாக்கிரதையாக இடதுபுறம் திரும்ப முயன்ற நிலையில், அதன் பின்னால் வந்த அரசு பேருந்து அதிவேகமாக மோதியது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்