அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

x

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாசரம்பட்டி ஏரி அருகே பெங்களூருவிலிருந்து விருத்தாசலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக சிங்காரப்பேட்டையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி ஒன்று, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்