"ராஜ்பவன்-ஐ சுத்தமாக வைப்பது தான் கவர்னர் வேலை.." - தயாநிதி மாறன் MP சுளீர்

x

ஆளுநரின் வேலையே, ராஜ்பவன் மாளிகையை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் என்றும், அதை செய்யுங்கள் என்றும், திமுக எம்பி தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அமைந்தகரை, மேத்தா நகர் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில், சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து, ஆளும் கட்சிகளை மத்திய அரசு மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்