"திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல"... "அதிகாரத்திற்காக மொழி அரசியல்"... ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

x

திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமில்லை, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை உள்ளடக்கியது என ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதம் தொடர் திட்டம் குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகாரத்திற்காக மொழி அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் கட்சியினர் அரசியல் செய்வதாக விமர்சித்தார். அரசியல் கட்சியினர் நாட்டு மக்களின் பார்வையை குறுக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது திராவிடம் என்றால் தமிழர் என்று பேசப்பட்டு வருவதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமில்லை, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை உள்ளடக்கியது எனவும் விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்