"உங்க ஆலோசனைகளை அள்ளிக்கொடுங்க"... இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

x

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி20 இளம் தூதுவர் உச்சிமாநாடு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவின் கலாசாரம், ஆன்மிகம் பழமையானது என்றும், பாரத நாட்டைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என‌ பிரிந்து இருப்பதாகவும், இதனால், ஒரு குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

தாங்கள் தான் அடுத்த தலைவர்கள் என்பதை புரிந்து இளைஞர்கள் அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்