ஆளுநர் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கிறார்..." - தமிழருவி மணியன் பேச்சு

x
  • தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காந்தியவாதி தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என் ரவி, தன் வீடு உள்ளிட்ட அனைத்து இல்லங்களிலும் பெண்களுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
  • ஆண்களை விட பெண்களுக்கு தலைமைப் பண்பு அதிகம் என்றும் அவர் கூறினார்.
  • பின்னர் பேசிய தமிழருவி மணியன் அன்பின் அடிப்படையில் விளையும் ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கும் தமிழக ஆளுநரை தான் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்