"பாஜக-வின் வாக்கு வங்கிக்கு வேட்டு வைத்த ஆளுநர்" - முரசொலியில் பகீர் தகவல்

பாஜக-வின் வாக்கு வங்கிக்கு வேட்டு வைத்த ஆளுநர் - முரசொலியில் பகீர் தகவல்
x

தமிழ்நாடு பெயர் சர்ச்சை விவகாரத்தில் தமிழர் நெஞ்சில் நெருப்பு மூட்டவே ஆளுநர் நினைப்பதாக முரசொலியில் கட்டுரை வெளியாகி உள்ளது.

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில், தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்பதற்கான விளக்கம் அளிக்க முன்வந்த ஆளுநர், அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை என்று சொல்லி இருப்பது, அதை விட மிகத் தவறான கருத்தாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருப்பதற்குப் பதிலாக அறிக்கை விடாமலேயே இருந்திருக்கலாம் எனக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த செயல்பாடு பா.ஜ.க.வின் வாக்குவங்கிக்கு வேட்டு வைப்பதாகவே இருக்கிறது என முரசொலி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.






Next Story

மேலும் செய்திகள்