"ஆக.15-க்குள் அரசு அனுமதி வழங்க வேண்டும்" - ராமர் பிள்ளை

x

மூலிகைப் பெட்ரோலை பயன்படுத்த ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அது வரை தண்ணீர் அருந்தாமல் , சாப்பிடாமல் இருப்பேன் என ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமர் பிள்ளை, மூலிகைக் கரைசல், உயிரி ரசாயன கரைசல் ஆகியவற்றை கலந்து காகிதம் ஒன்றை அந்த கரைசலில் நனைத்து எரியூட்டினார். ஆனால் அந்த காகிதத்தில் தீ பற்றவில்லை. பின்னர் அந்த கரைசலினுள் பிளாட்டினம் , நிக்கல் உலோகங்கள் என கூறி உலோக குண்டுகளை சேர்த்து மீண்டும் காகிதத்தை பற்ற வைத்த போது அதில் நெருப்பு பற்றி எரிந்தது. அதில் இருந்த திரவத்தின் மீது மட்டுமே நெருப்பு எரிந்தது. இதன் மூலம் தனது எரி பொருளை வாகனங்களுக்கு பயன்படுத்தினால் புகை வராது என்று ராமர் பிள்ளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மூலிகைப் பெட்ரோலை பயன்படுத்த ஆகஸ்ட் 15 - ம் தேதிக்குள் அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், அது வரை தண்ணீர் அருந்தாமல் , சாப்பிடாமல் இருப்பேன் என ஆவேசமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்